வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: March 2010

Wednesday, March 31, 2010

வன்முறை..!

புற்களின் மீது வன்முறை
சமாதானமாய்
கலைந்தபோது
மரணித்திருந்தது புல்..!

-'பரியன் வயல்' சே.குமார்


(தோழி பத்மா சன்ஷைன் அவார்டை தூக்கி நமக்கு கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு நன்றி. அப்புறம் நம்ம பிறந்து இன்னும் ஆறு மாதம்தான் ஆகுது. அதனால நாம மத்தவங்களுக்கு கொடுக்கிறது நல்லாயில்லை. அதனால நா யாருக்கும் கொடுக்க நினைக்கலை. சின்னப்புள்ள பெரியவங்களுக்கு கொடுத்தா நல்லா இருக்காததுல்லங்க... ---- நட்புடன் கிறுக்கல்கள்.)




Friday, March 26, 2010

மரண உறவு

மரணத்தின் பாதையை
அறியாமல் காற்றோடு
உறவாடியது இலை..!
வெட்டுப்பட்டது மரம்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Tuesday, March 23, 2010

இதயத் திருடி

காந்தக் கண்ணாம்..!
வசீகரிக்கும் உதடாம்..!
உடுக்கு இடையாம்..!
தந்தக் கால்களாம்..!
ஆளாளுக்கு உளறல்..!
நீ இதயத் திருடி என்பது
அவர்களுக்குத் தெரியுமா..?

-'பரியன் வயல்' சே.குமார்




Sunday, March 21, 2010

அடிமை

உன் கொலுசிற்குள்
என்ன வைத்துள்ளாய்...!
அதன் சிணுங்கலில்
அடிமையாய் மனசு...!

-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 17, 2010

வெளுத்ததால்...

வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!

'பரியன் வயல்' சே.குமார்




Thursday, March 11, 2010

சொல்லாத காதல்

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

--'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, March 9, 2010

தவம்

நீ பூக்கும்
சிறு புன்னகைக்காக
நீண்ட நேரமாய்
வெயிலில் நீறு பூக்க..!

-'பரியன்வயல்' சே.குமார்